/* */

மயிலாடுதுறை கோயில் பாதுகாவலர் கொலை வழக்கில் துப்பு: ரூ.10 ஆயிரம் பரிசு

மயிலாடுதுறை கோயில் பாதுகாவலர் கொலை வழக்கில் துப்பு கொடுப்பவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை கோயில் பாதுகாவலர் கொலை  வழக்கில் துப்பு: ரூ.10 ஆயிரம் பரிசு
X
கொலை செய்யப்பட்ட காவலாளி சாமிநாதன்.

மயிலாடுதுறை படித்துறை விஸ்வநாதர் கோயிலில் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, கோயிலில் இரவுப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர் எஸ்.சாமிநாதன்(55) மர்ம நபரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாமிநாதன் மே 14-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இக்கொலை நடந்து 6 மாதங்கள் ஆகியும் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை போலீசார் அறிவித்தனர்.

இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளரை 8778347770 என்ற எண்ணிலும், மயிலாடுதுறை காவல் ஆய்வாளரை 9442003309 என்ற எண்ணிலும், காவல் உதவி ஆய்வாளரை 9498164710 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க மயிலாடுதுறை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 8 Nov 2021 3:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  2. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  4. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  5. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு