/* */

2 கைகள் இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவி

மயிலாடுதுறையில் 2 கைகளும் இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் மாணவி பிளஸ்- 2 தேர்வு எழுதி உள்ளார்.

HIGHLIGHTS

2 கைகள் இல்லாத நிலையிலும் நம்பிக்கையுடன் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவி
X

2 கைகளும் இல்லாத நிலையில் மயிலாடுதுறையில் ஆசிரியை உதவியுடன்  மாணவி பிளஸ்2 தேர்வு எழுதினார்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 89 பள்ளிகளில் கல்வி பயிலும் 5042 மாணவர்களும் 5353 மாணவிகள், 52 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 395 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு கைகளும் இல்லாத லெட்சுமி என்ற மாணவி ஆசிரியை உதவியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினார். பிறந்தபோது இரண்டு கைகளும் இல்லாத பெண் குழந்தை என்பதால் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் இவர், இரண்டு வயது குழந்தையாய் இருந்தபோது இருந்தே வளர்ந்து வருகிறார். தற்போது தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவியை பலரும் பாராட்டினர்.

Updated On: 5 May 2022 10:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்