சீர்காழி நகராட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

சீர்காழி நகராட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
X

சீர்காழியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சீர்காழி நகராட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், சீர்காழி நகராட்சி தேர்தலை முன்னிட்டு சீர்காழியில் உப்பனாறு,தென்பாதி,புறவழிச்சாலை,சூரக்காடு உள்ளிட்ட இடங்களில் போலீசார், மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் பொருட்கள் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்துவருகின்றனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரி கூட்டுறவு சார்பதிவாளர் செல்வராணி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களிலிருந்து சீர்காழியை நோக்கி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து ஆவணங்களை சரிபார்த்து அனுப்பிவைக்கின்றனர். மேலும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை வீடியோ கேமராவில் பதிவு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business