/* */

குத்தாலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கண்பரிசோதனை-இலவச கண்ணாடி

மயிலாடுதுறை குத்தாலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கண்பரிசோதனை நடத்தி இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

குத்தாலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கண்பரிசோதனை-இலவச கண்ணாடி
X
குத்தாலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட குத்தாலம் ஒன்றியம் அகரஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூலம் மாணவ மாணவியர்களுக்கு கண் பரிசோதனை செய்து விலையில்லா கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக அரசின் இத்திட்டத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பிலும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பிலும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அருள் தேவராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷ், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜரின் ஜெயராணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Sep 2021 2:21 PM GMT

Related News