மயிலாடுதுறை அருகே ருத்ராபதியார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

X
மயிலாடுதுறை அருகே ருத்ராபதியார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
By - M.Vinoth,Reporter |6 March 2022 5:27 PM IST
மயிலாடுதுறை அருகே ருத்ராபதியார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தோப்புத் தெருவில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ருத்ராபதியார் ஆலய ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் வேதவிற்பன்னர்கள் நான்குகால பூஜை செய்து இன்று மகா பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. பின் மேளதாளம் முழங்க, வானவேடிக்கை விண்ணை எட்ட, புனிதநீர் அடங்கிய கடங்களை வேதவிற்பன்னர்கள் சுமந்து சென்று, வேத மந்திரம் ஒலிக்க கோயில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, ருத்ராபதியாரின் அருளை பெற்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu