/* */

மயிலாடுதுறை அருகே குளத்தில் மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த கோரிக்கை

மயிலாடுதுறை அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே  குளத்தில் மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த கோரிக்கை
X

மயிலாடுதுறை அருகே குளத்தில் செத்து மிதந்த மீன்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோழிகுத்தி கிராமத்தில் பெரியகுளம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கக்கூடியர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பொதுகுளமாக பெரியகுளம் அமைந்துள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஊர் நாட்டாமை பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் தனி நபர் ஒருவருக்கு இந்த குளமானது குத்தகைக்கு விடப்படு மீன் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளத்தின் மீன்கள் ஆங்காங்கே செத்து மிதக்க தொடங்கியுள்ளன. இன்று ஏராளமான மீன்கள் செத்து தண்ணீரின் மேற்பரப்பில் மிதந்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசக் தொடங்கியுள்ளது.

குளத்தில் மீன்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா இல்லை தண்ணீரின் தன்மை மாறுபட்டதன் காரணமாக மீன்கள் நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். ஊர் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து குத்தகைதாரரான இளங்கோ என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு துர்நாற்றம் வீசிய நிலையில் குளத்தில் செத்து கிடக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 23 Jan 2022 4:39 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்