/* */

விவசாயிகளுக்கு நிவாரணம்: மயிலாடுதுறையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி மயிலாடுதுறையில் அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு நிவாரணம்: மயிலாடுதுறையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் அ.தி.மு.க. சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய பெரு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், அனைவருக்கும் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், சம்பா அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும், மழையால் பாதித்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பினர்.

இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி தாலுகா அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 தாலுகாவில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Updated On: 23 Jan 2022 5:54 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்