/* */

கனமழையால் வழுவூர் வி.ஏ.ஓ. அலுவலகத்தின் மேற்கூரை சேதம்

கனமழை காரணமாக, மயிலாடுதுறை அருகே வழுவூரில், கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை சேதமடைந்தது.

HIGHLIGHTS

கனமழையால் வழுவூர் வி.ஏ.ஓ. அலுவலகத்தின் மேற்கூரை சேதம்
X
வி.ஏ.ஓ. அலுவலகத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது; பழைய கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவகையில், குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது.

கட்டிடத்தின் மேற்பகுதி காரைகள் பெயர்ந்து விழுகின்றன. தற்பொழுது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து 3 நாட்கள் அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல், சேதமடைந்த கட்டிடத்தில் உயிர் பயத்துடன் அரசு ஊழியர்கள் வேலை பார்த்து வருவதாக அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக பாதிக்கப்பட்ட கட்டிடங்களை சரிசெய்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 Nov 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்