/* */

நாகையில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம்

நாகையில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவிக்கு நீதி கேட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

நாகையில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம்
X

தனியார் கல்லூரி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு நாகையில் மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் சுபாஷினி (18) என்ற மாணவி ( பிசியோதெரபிஸ்ட்) முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பருவ கட்டணம் செலுத்தாததால், மாணவியை வகுப்பாசிரியர் வகுப்பின் வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி இறந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு பகுதியில் உள்ள டி.பி.எம்.எல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் சங்கம் மாவட்ட குழு உறுப்பினர் எஸ். மார்ட்டின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு வகுப்புகளை சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் தனியார் கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் , நாகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 April 2022 4:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது