மயிலாடுதுறையில் குற்றங்களை தடுக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

மயிலாடுதுறையில் குற்றங்களை தடுக்க ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு
X

மயிலாடுதுறையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ட்ரோன்  கேமரா மூலம் கண்காணித்தனர்.

மயிலாடுதுறையில் தீபாவளி குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை நகரில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கடைவீதியில் பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக மயிலாடுதுறை பெரியகடைவீதி, பட்டமங்கல தெரு, காந்தி சாலை ஆகிய முக்கிய கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. கடை வீதியில் குவிந்த மக்களிடம் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ai in future agriculture