/* */

குத்தாலம்: தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு

குத்தாலம் பேரூராட்சி தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

HIGHLIGHTS

குத்தாலம்: தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க  போலீசார் அணிவகுப்பு
X

குத்தாலத்தில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற உள்ள பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களின் தேர்தல் பதற்றத்தை தணிக்கும் வகையிலும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணி இன்று குத்தாலத்தில் நடைபெற்றது.

இந்தப் பேரணியில் காவல் ஆய்வாளர்கள் செல்வம், வள்ளி, சிவதாஸ், செல்வி, சங்கீதா, ஆகிய 6 காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு குத்தாலம் கடைவீதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி, மேலசெட்டி தெரு, கும்பகோணம் மெயின் சாலை வழியாக காவல் நிலையத்தை அடைந்தனர்.

இந்த பேரணியில் 100 க்கும் மேற்பட்டகாவல்துறையினர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 10 Feb 2022 3:26 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  5. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  6. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  7. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  9. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  10. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்