தரங்கம்பாடியில் பா.ம.க. வில் இருந்து விலகிய 50 பேர் தி.மு.க.வில் ஐக்கியம்

தரங்கம்பாடியில் பா.ம.க. வில் இருந்து விலகிய 50 பேர் தி.மு.க.வில் ஐக்கியம்
X

தரங்கம்பாடியை சேர்ந்த பா.ம.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பா.ம.க. வில் இருந்து விலகிய 50 பேர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு பாட்டாளி மக்கள் கட்சி நகர இளைஞரணி செயலாளர் மணிமாறன் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தெற்கு ஒன்றிய செயலாளர் எம். அப்துல் மாலிக் தலைமையில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில் பொறையார் கலைஞர் அரங்கத்தில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள் பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business