/* */

பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சீர்காழியில் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
X

சீர்காழியில் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் பற்றி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சபாநாயகம் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் இன்று பிளாஸ்டிக் பொருட்களான டீ கப், அன்றாடம் பயன்படுத்தும் கேரிபேக், தெர்மகோல் உள்ளிட்ட பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் சீர்காழி நகராட்சி சார்பில் நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் பட்டுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் நீர்நிலைகள் மாசடைவதையும், நிலத்தடி நீர் மண்ணுக்குள் செல்ல தடை ஏற்படுவதையும் எடுத்துக்கூறிய ஆணையர் மெழுகு தடவப்பட்ட டீ கப்பில் தேநீர் அருந்துவதால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் வர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார் .

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விவரங்களையும் , எவற்றையெல்லாம் நாம் பயன்படுத்த வேண்டும் என்பனஅடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.இதில் நகராட்சி அதிகாரிகள் , பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Dec 2021 4:41 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  3. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  6. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  7. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  8. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  9. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  10. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்