/* */

குத்தாலம் காவல் ஆய்வாளர் பொய் வழக்குப் போடுவதாக எஸ்பியிடம் புகார்

குத்தாலம் காவல் ஆய்வாளர் பொய் வழக்குப் போடுவதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார்

HIGHLIGHTS

குத்தாலம் காவல் ஆய்வாளர் பொய் வழக்குப் போடுவதாக எஸ்பியிடம் புகார்
X

ஆய்வாளர் வள்ளி மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு அளித்த கார்த்திகேயன்

மயிலாடுதுறை மாவட்டம் தேரழந்தூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மீது கோயில் விழா தொடர்பாக குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி என்பவர் பொய் வழக்குப் பதிந்ததாக கூறப்படுகிறது.

ஆய்வாளர் வள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை இயக்குநருக்கு காரத்திகேயன் கோரிக்கை அளித்து இருந்தார். ஆனால் காவல்துறை இயக்குநர் நடவடிக்கை எடுக்காததால் அவரை பிரதிவாதியாக இணைத்து, அவர் நடவடிக்கை எடுக்க கட்டளையிடும்படி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இருதரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மனுதாரருக்கு காவல் கண்காணிப்பாளருக்கு புதிய கோரிக்கை மனு அளிக்குமாறு அறிவுறுத்தி, மனு அளித்த இரண்டு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு மனு விசாரணையை முடித்து வைத்தார்.

இந்நிலையில், இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த கார்த்திகேயன் எஸ்பி நிஷாவிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்மீது குத்தாலம் காவல் ஆய்வாளர் அடுத்தடுத்து பல பொய் வழக்குகளை பதிந்து, குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யும் அளவிற்கான சட்டவிரோதமாக பொய்வழக்குகளை போட்டுள்ளதாகவும், பொய்வழக்குகள் பதிவிடும் குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 26 April 2022 2:54 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்