/* */

வயதோ 60! உடலோ 20!

கல்லூரிக் பருவத்தில் ஓடுகளை உடலில் உடைத்ததை மீண்டும் நிகழ்த்திக் காட்டிய முதியவர். யோகாவால் உடலை இரும்புபோல் இருப்பதாக பெருமிதம்

HIGHLIGHTS

வயதோ 60! உடலோ 20!
X

யோகா ரவி ஓடுகளை உடைக்கும் காட்சி

மயிலாடுதுறையில் கல்லூரிக் பருவத்தில் ஓடுகளை உடலில் உடைத்து நிகழ்த்திய சாதனையை 40 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மீண்டும் நிகழ்த்திக் காட்டிய முதியவரான முன்னாள் மாணவர். யோகா பயிற்சியால் உடலை இரும்புபோல் வைத்திருப்பதாக பெருமிதம்

மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் பிரபல யோகா பயிற்றுநர் யோகா ரவி. சிறு வயதிலேயே கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை கற்ற ரவி, 1977-1980-ஆம் கல்வியாண்டில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் பி.காம் பயின்றபோது நடைபெற்ற கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியர்கள் முன்னிலையில் தனது நண்பர் பாண்டியன் உதவியுடன் தனது உடலில் கை, தோள், இடுப்பு, தொடை மற்றும் மண்டைப் பகுதியில் 10 இடங்களில் மங்களூர் ஓடுகளை உடைத்து சாதனை நிகழ்த்தினார். அதன்பின், ரவி யோகா கலையை பயின்று அக்கலையில் தேர்ச்சி பெற்று, தற்போது சென்னையில் தங்கி இந்தியா முழுவதும் பல்வேறு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்து வருகிறார்.

தற்போது, 40 ஆண்டுகளைக் கடந்த நிலையில் இன்று மயிலாடுதுறையில் பேராசிரியர் வீட்டில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் இளமை பருவத்தில் நிகழ்த்திய சாதனையை தனது 60-வது வயதில் மீண்டும் நிகழ்த்தினார். வயது முதிர்வின் காரணமாக ரயில்வே ஓட்டினைதலைப்பகுதியில் உடைக்க வேண்டாம் என்று நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிற இடங்களில் 8 ஓடுகளை தன் நண்பர் பாண்டியன் உதவியுடன் உடைத்தார்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பின்போது ஓய்வு பெற்ற தனது கல்லூரி பேராசிரியர் வன்மீக வெங்கடாச்சலம் முன்னிலையில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். கராத்தே போன்ற கலைகளின் மூலம் மட்டுமின்றி, யோகா கலையின் மூலமாகவும் உடலினை உறுதியாக இரும்பு போன்று வைத்திருக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியதாக யோகா ரவி தெரிவித்தார்.

நிகழ்சியில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் 13பேர் உள்ளிட்ட ஏராளமானோர் சாதனை நிகழ்த்திய ரவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 12 April 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  2. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  4. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  6. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  9. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  10. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!