/* */

மழை பாதிப்பு: திட்டமிடாத நகராட்சி நிர்வாகத்தை திட்டித்தீர்த்த மக்கள்

மழைக்காலம் தொடங்கும் முன்பே, மயிலாடுதுறை நக்ராட்சி மெத்தனமாக இருந்ததால், பெரும் பாதிப்புகளை சந்தித்து வருவதாக, மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

மழை பாதிப்பு: திட்டமிடாத நகராட்சி நிர்வாகத்தை  திட்டித்தீர்த்த மக்கள்
X

மயிலாடுதுறையில், தற்போது அவசர அவசரமாக வடிகால் வாய்க்கால்களை மூடியுள்ள சிமெண்ட் பலகைகளை, ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து தள்ளிய மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, சேந்தங்குடி, புதுத்தெரு, கால்டெக்ஸ், பூம்புகார் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் முழுமையாக சரிசெய்யப்படாததால் மழைக்காலங்களில் இப்பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து, அவ்வப்போது செய்திகள் வெளியானால் கூட, வடிகால் வாய்க்கால்களை சரிசெய்யாமல், சம்பந்தப்பட்ட பகுதியில் நகராட்சி வாகனங்கள் மூலம் மோட்டார் கொண்டு தற்காலிகமாக உறிஞ்சி செல்கின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் கண்ணாரத்தெரு பகுதியில் மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்து, மாபெரும் வடிகால் வாய்க்கால் சீரமைப்புப் பணி நடைபெற்றது. ஆனால் அதனை ஒட்டியே உள்ள கச்சேரி சாலையில் வடிகால் வாய்க்கால்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

இதன்காரணமாக மழைநீர் பாதாள சாக்கடை ஆள்நுழைவுத் தொட்டியில் புகுந்து கழிவுநீரோடு சேர்ந்து வெளியேறி சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. கடந்த 15 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கச்சேரி சாலையில் மழைநீர் தேங்கி வடியாமல் நின்றது. இதையடுத்து, இன்று நகராட்சி நிர்வாகத்தினர் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டுவந்து, வடிகால் வாய்க்கால்களை மூடி, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அமைத்திருந்த 2 அடி அகல சிமெண்ட் பலகைகளை இடித்து அகற்றினர்.
மழைக்காலம் என்பதால் அப்பள்ளத்தில் யாரேனும் விழுந்து உயிரிழக்கக்கூடிய அபாயம் உள்ளதாகவும், இத்தனைக்காலம் இந்த வேலைகளை செய்யாமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்றும், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தினரை கேள்விகளால் துளைத்தனர். ஆனால், நகராட்சியினரோ அதனைக் கண்டு கொள்ளாததுபோல் மழைநீரை வடியவைக்கும் முயற்சியிலேயே கவனமாக இருந்தனர்.
நகராட்சி ஆணையரின் வீட்டுக்கு அருகிலேயே, பூம்புகார் சாலையில் வெள்ளம்போல் மழைநீர் தேங்கி நிற்பதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவே, கழிவுநீர் வழிந்தோடி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், அதனையே கண்டு கொள்ள நகராட்சி நிர்வாகத்தினர், பொதுமக்களான தங்கள் பகுதியை எவ்வாறு கண்டுகொள்வார்கள் என்று புலம்பினர்.

Updated On: 12 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்