சீர்காழியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் நகரும் புகைப்பட கண்காட்சி

சீர்காழியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் நகரும் புகைப்பட கண்காட்சி
X

சீர்காழியில் வ.உ.சி.யின் நகரும் புகைப்பட கண்காட்சியை பள்ளி மாணவிகள் கண்டு களித்தனர்.

சீர்காழியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் நகரும் புகைப்பட கண்காட்சியை மாணவர்கள் கண்டு களித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.. உ. சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் படி அவரது வாழ்கை , வரலாற்றை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு பேருந்தில் நகரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு சென்று வருகிறது.

அவ்வகையில் சீர்காழி சீர்காழி ச .மு .இ மேல்நிலைப் பள்ளி மைதானம் நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனம் வருகை புரிந்தது. சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, தனியார் பள்ளிகள் என 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் புகைப்பட கண்காட்சியை கண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் சுதந்திரம் பங்களிப்பு மற்றும் வாழ்க்கை வரலாற்று முறைகள் குறித்து ஆசிரியர்கள் விவரிக்க தெரிந்து கொண்டனர்.

கண்காட்சி வாகனத்தில் அமைக்கப்பட்ட இருந்த வ.உ.சி. உருவச்சிலையை மாணவ-மாணவிகள் வணங்கி உருவச் சிலையுடன் நின்று செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?