/* */

மயிலாடுதுறை அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்களின் சிலம்பாட்ட போட்டி

மயிலாடுதுறை அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்களின் சிலம்பாட்ட போட்டி
X

மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சிலம்பாட்ட போட்டி நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பாளரும்,பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் சிலம்பம், இரட்டை சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, சுருள்வாள், மான்கொம்பு, கட்டைக்கால் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மயிலாடுதுறையை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவர்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ரவி, கல்வி குழும தாளாளர் நெடுஞ்செழியன், மருத்துவர் வீரபாண்டியன், மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு சிலம்பாட்டத்தைக் கண்டு ரசித்தனர்.

Updated On: 3 April 2022 2:22 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!