/* */

பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சீர்காழி அருகே மேலையூரில் அமைந்துள்ள பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
X

இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் இந்து சமய அறநிலையதுறையின் கீழ் இயங்கும் பூம்புகார் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை புதுப்பிப்பது மற்றும் நவீன உட்கட்டமைப்புகள் ஏற்படுத்துவது குறித்து அங்கு உள்ள வகுப்பு அறைகளை இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள் தேவை குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்து சமய அறநிலையதுறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை ஆய்வு செய்து வருகிறோம். இங்கு படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டிடங்கள், நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கபடும். மேலும் காலியாக உள்ள பேராசிரியர்கள் தேர்வு செய்யபட்டு பணியமர்த்தபடுவார்கள் எனவும் உறுதியளித்தார்.

சிதம்பரம் தீட்சிதர்கள் நடவடிக்கை குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை செய்துள்ளோம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் உரிய நேரத்தில் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கபடும் எனவும் கூறினார்.

இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கண்ணன் உள்ளிட்ட, அறநிலையத்துறை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Updated On: 11 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!