Begin typing your search above and press return to search.
மயிலாடுதுறை: பலத்த மழையால் டி.எஸ்.பி.அலுவலகத்தை நீர் சூழ்ந்தது
மயிலாடுதுறையில் பெய்த பலத்த மழையால் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் தண்ணீரால் சூழப்பட்டது.
HIGHLIGHTS
மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.மயிலாடுதுறையில்95 மி.மீ.மணல்மேடு 21 மி மீ .சீர்காழி 27மி.மீ கொள்ளிடம் 1 4.40 மிமீமழை பெய்துள்ளது.
இந்த மழை தாளடி விவசாயத்திற்கு ஏற்ற மழை.மீதமுள்ள 10 சதவீத குறுவை அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறையில் மட்டும் 95 மிமீ மழைபெய்ததால் மயிலாடுதுறையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
குறிப்பாக மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அனைத்து மகளிர் காவல் நிலைய அலுவலகம் செல்லும் வழி முன்பு மழைநீர் தேங்கியுள்ளது பொதுப்பணித்துறை இதை சரி செய்ய வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.