/* */

செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி

உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடப்பதற்காக செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

HIGHLIGHTS

செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி
X

உள்ளாட்சி தேர்ததலை அமைதியாக நடத்துவதற்காக செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திரபாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 30 வது வார்டு க்கான ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் வருகின்ற 9ந் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தி. மு. க., அ. தி. மு. க.,அ.ம.மு.க. நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்தத் தேர்தலில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இன்று காட்டுச் சேரி ஊராட்சியில் போலீசாரின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாக்மேக் தலைமை தாங்கினார். பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு முன்னிலை வகித்தார்.

போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் அடங்கிய குழுவினர் காட்டுச்சேரி கடைத்தெருவில் இருந்து சமத்துவபுரம் வரை அணிவகுப்பு நடத்தினர். இதில் 70க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Oct 2021 10:32 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...