/* */

மயிலாடுதுறை அருகே சொகுசு காரில் சாராயம் கடத்தியவர் கைது

மயிலாடுதுறை அருகே, சொகுசு காரில் சாராயம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே சொகுசு காரில் சாராயம் கடத்தியவர் கைது
X
பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் கைதானவர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில், சாராய விற்பனையை தடுப்பதற்காக காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெரம்பூர் அருகே காருகுடி என்ற இடத்தில் காரைக்காலில் இருந்து வேகமாக வந்த காரை போலீசார் வழிமறித்து நிறுத்தினர்.

இச்சோதனையில், அக்காரில் மூட்டை மூட்டையாக பாண்டி சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது. செம்பனார்கோவிலைச் சேர்ந்த குமார் (44) என்பதும் மயிலாடுதுறை அருகில் தனியூர் என்ற இடத்தில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து சாராயத்தை பாக்கெட் போட்டு சில்லரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, குமாரை கைது செய்து, சாராயம் மற்றும் காரினை பறிமுதல் செய்து, மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வத்திடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார் மற்றும் சாராயத்தின் மதிப்பு ரூ.13.20 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 15 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  2. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  3. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  6. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...