/* */

குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை

மயிலாடுதுறை அருகே குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குத்தாலம்  அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை
X
கொலை செய்யப்பட்ட வைத்தியநாத சுவாமி.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மூவலூர் பக்கிரியா பிள்ளை தெருவை சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் வைத்தியநாதசுவாமி(40). லாரி டிரைவரான இவர் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் சித்தப்பா மூர்த்தியின் மகன்களான திவாகர்(32), தினேஷ்(34) ஆகியோருடன் வைத்தியநாதசுவாமிக்கு இடப் பிரச்சனை இருந்து வந்ததாகவும் இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூவலூர் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த திவாகர் மற்றும் தினேஷ் ஆகியோரிடம் வைத்தியநாதசுவாமி மதுபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த திவாகர் அருகிலிருந்த இரும்பு கைப்பிடி உடைய வாறுகோலால் வைத்தியநாத சாமியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்து போன வைத்தியநாத சாமி தலையில் ரத்தம் சொட்ட சொட்ட மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றவர் அங்கு மயங்கி நோயாளிகள் அமரும் இடத்தில் மயக்க நிலையை அடைந்துள்ளார். இதனைப் பார்த்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அதிகமாக ரத்தம் வெளியேறி இறந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக உடல் சவக்கிடங்கிற்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது. சம்பவம் அறிந்த குத்தாலம் போலீசார் வைத்தியநாதசுவாமியை கட்டையால் தாக்கிய அவரது சித்தப்பா மகன்களான திவாகர் மற்றும் தினேஷ் ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Nov 2021 4:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’