/* */

திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திரம்: சிவனடியார்களுக்கு அருளாசி

இதையொட்டி ஞானமா நடராஜப்பெருமான் மற்றும் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது

HIGHLIGHTS

திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திரம்: சிவனடியார்களுக்கு  அருளாசி
X

திருவாவடுதுறை ஆதினத்தில் ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு சிவனடியார்களுக்கு வஸ்திர தானம், சேவையாளர்களுக்கு பொற்கிழி வழங்கி ஆதீனகர்த்தர் அருளாசி

திருவாவடுதுறை ஆதினத்தில் ஆதீனகர்த்தரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு சிவனடியார்களுக்கு வஸ்திர தானம், சேவையாளர்களுக்கு பொற்கிழி அளித்து ஆதீனகர்த்தர் அருளாசி வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மைவாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. இவ்வாதீனத்தின் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தற்போது அருளாட்சி புரிந்து வருகிறார். இவரது ஜென்ம நட்சத்திர விழா ஆதீன மடாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை ஞானமாநடராஜப்பெருமான் மற்றும் நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. மேலும் ரத்த தான முகாம், பல் சிகிச்சை மருத்துவ முகாம் உள்ளிட்ட முகாம்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து விழாவில் பல்வேறு சமுதாய மக்கள் சேவையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு "மனிதநேய மாமணி" என்ற பட்டத்தை வழங்கி பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கப்பட்டது. மேலும், சிவனடியார்கள் 100 பேருக்கு ஆதீனகர்த்தர் வஸ்திரங்களை வழங்கி அருள் ஆசி கூறினார். இதனை தொடர்ந்து மதியம் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Updated On: 24 May 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!