/* */

தீவிபத்தில் வீடு எரிந்து சேதம்: பூம்புகார் எம்எல்ஏ நேரில் நிவாரணம் வழங்கல்

தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், பாய், போர்வை உள்ளிட்டபொருள்களை வழங்கினார்

HIGHLIGHTS

தீவிபத்தில்  வீடு எரிந்து சேதம்:  பூம்புகார் எம்எல்ஏ நேரில் நிவாரணம் வழங்கல்
X

பரசலூர் ஊராட்சியில் கூரை வீடு திடீர் தீவிபத்தில் எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி ரூ 5,000 நிவாரணம் வழங்கினார்.

பரசலூர் ஊராட்சியில் கூரை வீடு திடீர் தீவிபத்தில் எரிந்து சேதம் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ 5,000 நிவாரணம் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், பரசலூர் ஊராட்சி சாத்தனூர் மேலத்தெருவை சார்ந்த வணமயில் (80) என்பவரது வீடு வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து சேதம் அடைந்தது. தகவலறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நிவாரணமாக வழங்கினார்.

அதேபோல, தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன் அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் மற்றும் வேட்டி, புடவை, மண்ணெண்ணெய், அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.இதில், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ஞானவேலன், செம்பனார்கோயில் வடக்கு ஒன்றிய செயலாளர் பிஎம்.அன்பழகன், செம்பனார் கோவில் வட்டார வருவாய் அலுவலர் ரகு, கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர் மற்றும் அரசு அதிகாரிகள், திமுக பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 25 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்