/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழையால் மீன் பிடி தொழில் பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழையால் மீன் பிடி தொழில் பாதிப்பு
X

தரங்கம்பாடி கடற்கரையில் மீன் பிடி படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று தினங்களுக்கு அதி கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிகன மழை காரணமாக கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தரங்கம்பாடி தாலுகாவில் 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை.

மேலும் 3500க்கும் மேற்பட்ட தங்கள் படகுகளை கரை ஓரம் நிறுத்தியுள்ளனர். கனமழை காரணமாக தரங்கம்பாடி சுனாமி குடியிருப்பு பகுதியில் பாரதியார் விதி, ரவீந்தரநாத் தாகூர் விதி எம்.ஜி.ஆர். வீதி, நேரு வீதி, திருவள்ளுவர் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிய வழியின்றி தேங்கி உள்ளது. முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் குடியிருப்புக்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது, இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படும் சூழல் உள்ளது. இதே போன்று நேற்று மாலை பெய்த அதி கனமழை காரணமாக பொறையார் கடைவீதியில் மழை நீர் வடியாமல் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வணிகர்கள் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். பல பகுதிகளில் மழை நீர் வடிய வழி இல்லாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Updated On: 10 Nov 2021 2:46 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...