/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் 39 மையங்களில் நடைபெற்ற அரசுப்பணிக்கான குரூப் 2 தேர்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 39 மையங்களில் அரசுப்பணிக்கான குரூப் 2 தேர்வில் 11 ஆயிரத்து 561 நபர்கள் தேர்வு எழுதினர்

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் 39 மையங்களில் நடைபெற்ற அரசுப்பணிக்கான குரூப் 2 தேர்வு
X

 மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு வட்டங்களில் 39 மையங்களில் நடந்த குரூப்2 தேர்வு மையத்தை ஆட்சியர் லலிதா ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 39 மையங்களில் அரசுப்பணிக்கான குரூப் 2 தேர்வில் 11 ஆயிரத்து 561 நபர்கள் தேர்வு எழுதினர். 3 பறக்கும் படைகள் 40 வீடியோ கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 2ல் உள்ள பணிகளுக்கான குரூப் 2 தேர்வு மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு வட்டங்களில் 39 மையங்களில் தேர்வு மையங்களில் நடைபெற்றது. 11 ஆயிரத்து 561 நபர்கள் தேர்வு எழுதினர். 39 தலைமை கண்காணிப்பாளர்கள், 3 பறக்கும் படையினர், 8 சுற்றுக்குழு அலுவலர்கள், 78 ஆய்வு அலுவலர்கள் தேர்வு மையங்களில் பணியில் ஈடுபட்டனர். 40 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்திலும், பார்வையற்றவர்கள் தேர்வு எழுத மாற்றுநபர் தனிஅறைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் தனியார் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 21 May 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  2. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  3. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  6. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  10. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை