/* */

காந்தி சிலைக்கு சட்டை இல்லாமல் வந்து மாலை அணிவித்த விவசாயிகள்

மயிலாடுதுறையில் விவசாயிகள் மேல் சட்டை இல்லாமல் வந்து மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

HIGHLIGHTS

காந்தி சிலைக்கு சட்டை  இல்லாமல் வந்து மாலை அணிவித்த விவசாயிகள்
X

மயிலாடுதுறையில் விவசாயிகள் மேல் சட்டை இல்லாமல் வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மதுரை வந்த தேச தந்தை மகாத்மா காந்தி விவசாயிகள் மேல் சட்டை இல்லாமல் அரை ஆடை அணிந்து இருப்பதை பார்த்து, இந்தியாவின் கடைசி விவசாயி எப்போது முழுமையாக ஆடை அணிகிறானோ அதுவரை தானும் முழு ஆடை அணியப் போவதில்லை என்று அரை ஆடைக்கு மாறினார்.

பின்னர் அதுவே அவரது அடையாளமாக மாறிப் போனது. இந்த நிகழ்வு நடந்து 100 ஆண்டுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மயிலாடுதுறையில் 100 ஆண்டுகள் கடந்தும் தங்கள் நிலைமை இன்னமும் மாறவில்லை என விவசாயிகள் மயிலாடுதுறையில் உள்ள மகாத்மா காந்தியின் முழு உருவ சிலைக்கு சட்டையில்லாமல் அரை ஆடையுடன் வந்து மாலை அணிவித்து முறையிட்டனர்.

இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் பங்கேற்று காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து விவசாயிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 22 Sep 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’