/* */

மயிலாடுதுறை அருகே பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை அருகே மின்சார வாரியத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
X

மின்சார வாரியத்தால் பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களை விவசாயிகள் காட்டினர்.

மயிலாடுதுறை துணை மின் நிலையத்திலிருந்து செரூதியூர் கிராமம் வரை மின்சார வாரியத்தினர் ரூ. 25லட்சம் மதிப்பீட்டில் உயர் மின்னழுத்த மின்சாரத்திற்காக 6 கிலோமீட்டர் தூரம் வரை விளைநிலங்களில் 145 மின்கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது செருதியூர் நல்லத்துகுடி கிராமத்தில் பயிர், உளுந்து அறுவடை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 4 நாட்கள் தொடர் மழையின் காரணமாக அறுவடை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நல்லத்துக்குடி கிராமத்தில் மின்வாரியத்தினர் விளை நிலங்களில் மின்கம்பங்களை அமைக்கும் பணிக்காக டிராக்டர் மூலம் வயல்களில் மின்கம்பங்களை இழுத்துச்சென்று வயல்களை தோண்டி மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அறுவடை செய்யாமல் இருந்த பயறு, உளுந்து நாசமாகியுள்ளது. மேலும் மின்கம்பங்கள் அமைப்பது குறித்து முன்கூட்டியே விவசாயிகளும் தெரிவிக்காமல் பணிகள் நடைபெறுவதாகவும், சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு 5 அடி அகலம் வரை பயிறு உளுந்து சுமார் 5 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே இயற்கைச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மின்சார வாரியத்தால் ஏற்பட்டுள்ள இழப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளிடம் கருத்து கேட்டு மின்கம்பங்களை பதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 April 2022 3:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...