/* */

சீர்காழியில் மின்சாரம் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

சீர்காழியில் தமிழ்நாடு மின்உற்பத்தி,பகிர்மான கழகம் சார்பில் மின்சாரம் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

HIGHLIGHTS

சீர்காழியில் மின்சாரம் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
X

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மின்சாரம் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக மின்சார சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். முதல் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பேரணி முக்கிய வீதிகள் வழியாக சீர்காழி நகரில் வலம்வந்து புதிய பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது. இப்பேரணியில் மின்வாரிய அதிகாரிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மின்சார சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கியும் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 15 Dec 2021 12:35 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...