/* */

சீர்காழி மின்வாரிய ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

சீர்காழி அருகே பணியின்போது இறந்த மின்வாரிய ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சீர்காழி மின்வாரிய ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
X

மின்வாரிய ஊழியர் மகனுக்கு பணி நியமன ஆணையை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வள்ளுவகுடி கிராமத்தில் கடந்த ஆண்டு மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் கருணாகரன் என்பவர் உயிரிழந்தார்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கருணாகரனின் மகன் நவீன்ராஜுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி கருணாகரனின் மகன் நவீன்ராஜுக்கு கள உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. இன்று வழங்கினார்.

இந்நிகழ்வில் மின்சார வாரிய துறை செயற்பொறியாளர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் விசுவநாதன், உதவி பொறியாளர்கள் ரங்கராஜன், சுமத்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Sep 2021 10:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  4. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  5. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  7. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  8. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!