Begin typing your search above and press return to search.
ஆணவக்கொலை தடுக்க சட்டம் இயற்றக்கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
ஆணவக்கொலை தடுக்க சட்டம் இயற்றக்கோரி மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆணவ கொலைகளை தடுத்திட புதிய சட்டம் இயற்றிட கோரியும், பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட கோரியும் வலியுறுத்தினர்.
மாவட்டத் தலைவர் சிங்காரவேலன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ உள்ளிட்ட ஏராளமானோர் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.