/* */

தருமபுரம் ஆதீனம் குரு லிங்க சங்கம ஞான ரத யாத்திரைக்கு புறப்பட்டார்

தருமபுரம் ஆதீனம் மகராஷ்டிர மாநில புஷ்கர விழாவில் பங்கேற்பதற்காக குரு லிங்க சங்கம ஞான ரத யாத்திரையாக புறப்பட்டார்.

HIGHLIGHTS

தருமபுரம் ஆதீனம்  குரு லிங்க சங்கம ஞான ரத யாத்திரைக்கு புறப்பட்டார்
X

தலையில் லிங்கத்தை சுமந்தபடி ரதயாத்திரை புறப்பட்டார் தருமபுரம் ஆதீனம்.

மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரத்தில் கும்ப ராசிக்கு உரிய நதியான துங்கபத்ரா நதியில் துங்கபத்ரா மகா புஷ்கர விழா நவம்பர் 21ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆதீனமான தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அங்கு நடைபெறும் நிறைவு நாள் விழாவில் புனித நீராடுகிறார்.

இதற்காக தருமபுரம் ஆதீன மடத்திலிருந்து அவர் குரு லிங்க சங்கம ஞான யாத்திரையாக புறப்பட்டார். முன்னதாக ஆதீன பூஜை மடத்தில் அவர் சிறப்பு பூஜைகளை நடத்தினார். பின்னர் சொக்கநாதப் பெருமானின் திருவுருவத்தை தலையில் சுமந்து ஞான ரதத்தில் எழுந்தருளி யாத்திரை புறப்பட்டார். வழியெங்கும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தருமபுரம் ஆதீனகர்த்தருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

Updated On: 29 Nov 2021 4:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது