/* */

தருமபரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் விவகாரத்தில் அரசு முழுகவனம்: மாவட்ட ஆட்சியர்

தருமபரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் விவகாரம் அரசின் முழு கவனத்தில் இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பேட்டி

HIGHLIGHTS

தருமபரம் ஆதினம் பட்டினப்பிரவேசம்   விவகாரத்தில்  அரசு  முழுகவனம்: மாவட்ட ஆட்சியர்
X

செய்தியாளர்களிடம் பேசிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆர். லலிதா

தருமபரம் ஆதினம் பட்டினப்பிரவேசம் விவகாரம் , அரசின் முழு கவனத்தில் இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பேட்டியளித்தார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஓராண்டு சாதனை மலரை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மூவலூர் ராமாமிர்தம் மற்றும் வேதநாயகம் பிள்ளை ஆகியோரின் நினைவாக சிலை மற்றும் நினைவு மண்டபம் மயிலாடுதுறையில் அமைக்க தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.6 குளங்கள் தூர்வாரப்பட்டு அதனை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அனைத்து குளம் மற்றும் பூங்காக்கள் சீரமைக்க நிதி ஒதுக்கப்படும். மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனைக்கு தீர்வாக அரசு அதன் பணிகளை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது பலவீனமாக உள்ள பகுதிகளை சரி செய்து சாலை அமைக்க கூடிய பணிகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மற்றொரு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் .ரிங் ரோடு அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து உள்ளதாகவும் , இதற்கென சிறப்பு வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.தருமை ஆதீனம் பட்டின பிரவேசம் தடை விதித்த விவகாரம் அரசின் முழு கவனத்தில் இருப்பதாகவும் விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளி வந்தவுடன் தெரிவிக்கப்படும் என்றார் ஆட்சியர் லலிதா

Updated On: 7 May 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்