/* */

மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா

மயிலாடுதுறை அரசு மகளிர் கலைக்கல்லூரியில்,5 மாணவிகளுக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதால் 5 நாள் விடுமுறை விடப்பட்டது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா
X

மயிலாடுதுறை கல்லூரியில் ஒரு மாணவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில், நேற்று வெளியூரில் இருந்து வந்த 5 மாணவிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களுக்கும், அவரது தோழிகள், வகுப்பு மாணவிகள் ஆசிரியர்கள் என 369 நபர்களுக்கு கொரோன பரிசோதனை செய்யப்பட்டது.

2500 மாணவிகள் பயின்றுவரும் கல்லூரி என்பதால் நிர்வாகமும் சுகாதாரத்துறையும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5 தினங்கள் கல்லூரிக்கு விடுமுறை அளித்து 4 நாட்களுக்கு பாடங்களை ஆன்லைன் வகுப்பு மூலம் நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டு இன்றுமுதல் ஆன்லைன்மூலம் வகுப்பு எடுக்கப்பட்டுவருகிறது.

ஞாயிறுவரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மயிலாடுதுறையில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் கிளை ஒன்றில் ஆசிரியை ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது, உடனடியாக அவர் வகுப்பில் உள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Updated On: 24 Sep 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...