/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் துவக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டப்பணிகளை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் துவக்கம்
X

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் அடையாள அட்டைகளை வழங்கினார்.

ஊராட்சிப் பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுத்தப்படுவதைப் போன்று பேரூராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக மாவட்டத்தில் ஒரு பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு பணிகள் வழங்கப்படுகிறது.

அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு பேரூராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு, ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 3 நீர்நிலைகளில் தூர் வாரும் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து மணல்மேட்டில் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று, திட்டத்தை தொடங்கி வைத்து பேசி, பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 March 2022 8:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!