/* */

மீனவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு. ஒருவர் கொலை

மீனவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் புதுப்பேட்டை மீனவரை அடித்துக்கொன்ற 6 பேர் கைது

HIGHLIGHTS

மீனவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு. ஒருவர் கொலை
X

கடலில் மீன்பிடித்த போது வானகிரி- புதுப்பேட்டை கிராம மீனவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் புதுப்பேட்டை மீனவரை அடித்துக்கொன்ற வானகிரி மீனவ சிறுவர்கள் 2 பேர் உட்பட 6 பேர் கைது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, புதுப்பேட்டை மற்றும் வானகிரி கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலையில் சின்னங்குடி அருகே கடலுக்கு சென்று மூன்று கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துள்ளனர். அப்போது, புதுப்பேட்டை மீனவர்கள் மீன்பிடிக்க வீசிய வலையின் மேல் வானகிரி மீனவர்கள் படகு உரசியது. இதனால் தங்களது வலை சேதமடையும் என புதுப்பேட்டை மீனவர்கள் எச்சரித்தனர்.

இதனையடுத்து இரு கிராம மீனவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வானகிரி மீனவர்கள் புதுப்பேட்டை மீனவர்களை தாக்கியதில் படுகாயமடைந்த புதுப்பேட்டை கிராம மீனவர் மூர்த்தியை சக மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து பின்னர் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தரங்கம்பாடி கடலோர காவல்படை காவல்நிலையத்தில் புதுப்பேட்டை மீனவர்கள் புகார் அளித்தனர். அவர்கள் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து பூம்புகார் காவல் நிலையத்தில் வழக்கை ஒப்படைத்தனர்.

விசாரணை மேற்கொண்ட போலீசார் வானகிரியைச் சேர்ந்த சதீஷ், ஏழுமலை, செல்லதுரை, ராஜீவ்காந்தி மற்றும் சிறுவர்கள் நிதிஷ் நிதின் ஆகிய 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து சதீஷ், ஏழுமலை, செல்லதுரை, ராஜீவ்காந்தி ஆகியோரை பொறையார் சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் நிதின்(13) நிதிஷ்(14) ஆகியோரை நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சை சிறுவர்கள் சீர்திருத்தபள்ளியில் அடைக்கப்படவுள்ளனா.;

Updated On: 16 April 2021 3:34 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  2. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  3. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  5. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  7. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  8. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  10. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!