/* */

மழையால் சேதமடைந்த பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

சீர்காழியை அடுத்த புத்தூரில் மத்திய குழு ஆய்வு மழையால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

மழையால் சேதமடைந்த பயிர்களை மத்திய குழுவினர்  ஆய்வு செய்தனர்.
X

வெள்ள சேதம் குறித்த புகைப்படங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர் 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 10 தினங்களாக பெய்து வந்த நிலையில் விளைநிலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில் மத்திய அரசு வெள்ள சேதத்தை மதிப்பீடு செய்ய மத்திய குழுவை அனுப்பியது

இந்தக் குழுவானது இரண்டாக பிரிந்து தமிழகத்தில் ஆய்வை மேற்கொண்டது. மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான ஒரு குழுவினர் நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பாண்டிச்சேரியிலும் ஆய்வு மேற்கொண்டனர். இரண்டாம் நாளான இன்று கடலூரில் ஆய்வைத் தொடங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதிகளில் மாதிரவேளூர், சோதியக்குடி, ஆச்சாள்புரம் நல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தொடர்மழையால் பாதிப்புக்குள்ளான விளைநிலங்கள், பயிர்கள், வீடுகள் மற்றும் கால்நடைகள் குறித்த புகைப்படங்கள் புத்தூரில் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. சேதங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் சேதம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தை பார்வையிட்டனர்.

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 23 Nov 2021 1:01 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு