/* */

குத்தாலம் அருகே பேராவூர் ஸ்ரீ ஐயனார் கோயிலின் பூட்டை உடைத்து திருட்டு

மயிலாடுதுறை அருகே குத்தாலம் அருகே பேராவூர் ஸ்ரீ ஐயனார் கோயிலின் பூட்டை உடைத்து தங்க தாலி மற்றும் பணம் திருட்டு போனது.

HIGHLIGHTS

குத்தாலம் அருகே பேராவூர் ஸ்ரீ ஐயனார் கோயிலின் பூட்டை உடைத்து திருட்டு
X

திருட்டு நடந்த அய்யனார் கோவில்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பேராவூரில் ஸ்ரீ அய்யனார் கோவில் உள்ளது. 25 ஆம் தேதி இரவு இந்த கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அய்யனார் சிலை அருகில் உள்ள சாமி பூர்ணா, புஷ்கலா சிலையில் இருந்த 4 கிராம் மதிப்பிலான 3 தாலிகள், பித்தளை அண்டா, கோயில் மணிகள், உண்டியல் பணம் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து இன்று கோயில் நிர்வாகத்தினர் பாலையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கிராம கோயிலில் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 27 Jan 2022 6:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....