/* */

மயிலாடுதுறையில் முப்படை தளபதி மறைவிற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி

மயிலாடுதுறையில் முப்படை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு அனைத்து கட்சியினர் ஊர்வலமாக சென்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் முப்படை தளபதி மறைவிற்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி
X

முப்படை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு மயிலாடுதுறையில் அனைத்து கட்சியினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மயிலாடுதுறையில் தேசிய ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் மௌன ஊர்வலம் நடத்தப்பட்டது.

இதில், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், தி.மு.க, த.மா.கா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு மவுன ஊர்வலமாக வந்து பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினர்.

கூறைநாட்டில் தொடங்கிய அமைதிப் பேரணி முத்துவக்கீல் சாலை பகுதியில் நிறைவடைந்தது. பா.ஜ.க. ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை எம்‌.எல்.ஏ ராஜகுமார், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 9 Dec 2021 1:52 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு