/* */

சீர்காழி அருகே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா சிவராத்திரி உற்சவம்

சீர்காழி அருகே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா சிவராத்திரி உற்சவத்தையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர்.

HIGHLIGHTS

சீர்காழி அருகே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா சிவராத்திரி உற்சவம்
X

மகா சிவராத்திரியையயொட்டி பெண்கள் பால்குடம் எடுத்து சென்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைதீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

ஆண்டு தோறும் மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு கடந்த 26 ம் தேதி காவிரி குளக்கரையில் காப்புக் கட்டுதலுடன் துவங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான மயான சூறை இன்று இரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று பால்காவடி, பால்குடம் ,அலகு காவடிகள் வீதி உலா மேல தாளங்கள் முழங்க நடைபெற்றது.

இளைஞர்களின் கோலாட்டம் ,பார்வதி சிவன் ஆட்டத்துடன் வைத்தீஸ்வரன்கோவில் நான்கு விதிகளையும் வலம்வந்து கோவிலை வந்தடைந்தது , அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனைகளும் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தும், ஆண்கள் அலகு காவடிகள் எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

Updated On: 28 Feb 2022 1:17 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்