பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் ஆதரவு
அனைத்து ஓய்வூதியர் சங்க தலைவர் ஸ்ரீதரன் பேட்டி அளித்தார்.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மயிலாடுதுறை மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைப்பெற்றது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார்.
கூட்டத்திற்கு பிறகு நடந்த செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் இல.ஸ்ரீதரன். வருகிற மார்ச்-28,29 தேதிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைப்பெறவுள்ள 48 மணி நேர பொதுவேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது என அறிவித்தார்.
மேலும் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெறும் போராட்டங்களில் ஓய்வூதியர் சங்கத்தினர் திரளாக கலந்துக்கொள்வார்கள் என அறிவித்தார்.மேலும் நிலுவையில் உள்ள 20 ஆயிரம் மருத்துவ நிலுவை பட்டியல்களை உடனடியாக தீர்வு காண வேண்டும், சத்துணவு,அங்கன்வாடி உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும், 70 வயது நிறைவுபெற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல்-19 ல் வட்ட தலைநகரங்களிலும்,மே-17 ல் மாவட்ட மையங்களிலும் தர்ணா போராட்டம் நடத்தவும் , ஜூன் -21 ல் மாநில அளவில் பெருந்திரள் முறையீடு நடத்தவும் முடிவு செய்துள்ளதாகவும் மாநில தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu