திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவம்

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவம்
X

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி, அம்பாளை வழிப்பட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் ஆண்டுதோறும் 14 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் முக்கிய விழாவான இன்று அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதையொட்டி சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் முன் மண்டபத்திற்கு எழுந்தருளினார் மாலை மாற்று உற்சவத்துடன் சீர்வரிசை எடுத்துவர தருமபுரம் ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

பூஜைகளை ராஜா, ராமலிங்கம், கணேஷ், மகேஷ், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் செய்துவைத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் புஷ்பப் பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 11ஆம் தேதி சகோபர வீதி உலாவும், 12 ஆம் தேதி இரவு எமன் சம்காரமும், 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் திருவிழாவும், 16ஆம் தேதி தீர்த்தவாரியும், 18ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?