/* */

கணவரால் கைவிடப்பட்டவர், விதவைகளுக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழங்க உத்தரவு

கணவரால் கைவிடப்பட்டவர், விதவைகளுக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழங்க காணொளி மூலம் உத்தரவிடப்பட்டது.

HIGHLIGHTS

கணவரால் கைவிடப்பட்டவர், விதவைகளுக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழங்க உத்தரவு
X

பைல் படம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கணவரால் கைவிடப்பட்டவர், விதவைகள், திருநங்கைகள், பழங்குடியினர் ஆகியோருக்கு உடனடியாக ரேஷன் கார்டு வழங்கிட தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவரால் காணொளிக் காட்சி ஆய்வுக்கூட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் உடனடியாக ரேஷன் கார்டு வழங்கிட அனைத்து வட்ட வழங்கல் அலுவலரையும் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், திருநங்கைகள், பழங்குடியினர் ஆகியோர் ரேஷன் கார்டு பெற ஏதுவாக தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் செய்யும் அனைவருடைய மனுக்களும் உரிய விசாரணை செய்து உடனடியாக ரேஷன் கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரில் வர இயலாதவர்கள் வட்ட வழங்கல் அலுவலரை, 9445000308,

8526626166 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு தெரிவித்தார்.

Updated On: 16 March 2022 12:21 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...