/* */

மயிலாடுதுறை அருகே குருணை தின்ற 15 ஆடுகள் இறந்தது பற்றி போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை அருகே குருணை தின்ற 15 ஆடுகள் இறந்தது எப்படி என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே குருணை தின்ற 15 ஆடுகள் இறந்தது பற்றி போலீஸ் விசாரணை
X

மயிலாடுதுறை அருகே குருணை தின்றதால் இறந்த ஆடுகள்.

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட அரிவேளூர் கிராமம் மாரியம்மன்கோவில் பின்புறம் உள்ள திடலில் மேய்ந்துகொண்டிருந்த 5 ஆடுகள் நேற்று உயிரிழந்தது. இந்நிலையில் இன்றும் திடலில் மேய்ந்த ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது.

மீனா என்பவரின் 4 ஆடுகள், பன்னீர்செல்வத்தின் 3 ஆடுகள், மீராவின் 2 ஆடுகள் என பல்வேறு நபர்களின் 15 ஆடுகள் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டின் உரிமையாளர்கள் திடலில் சென்று பார்த்தனர். அப்போது மர்மநபர்கள் அரிசியில் குருணையை கலந்து பாத்திரத்தில் வைத்திருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரிசியில் குருணையை கலந்து வைத்த மர்மநபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்தடுத்து நேற்றும் இன்றும் 15 ஆடுகள் உயிரிழந்தது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 14 Oct 2021 6:52 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு