மயிலாடுதுறையில் ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் திட்டம்

மயிலாடுதுறையில் ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் திட்டம்
X

மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் ரூ.1.46 கோடி திட்டத்திற்கு பூமி பூஜை போடப்பட்டது.

மயிலாடுதுறையில் ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்.

மயிலாடுதுறை நகராட்சி 34-வது வார்டு பட்டமங்கல புதுத்தெரு ஸ்ரீநகர் காலனி பகுதியில் வண்ணான்குளம் என்ற குளம் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்குளத்தை சுற்றி, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைமேடை அமைக்குமாறு அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், இக்குளத்தை சுற்றிலும் நகராட்சி சார்பில் ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் சுற்று நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணியை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் பாலு மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture