/* */

மயிலாடுதுறை: 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை: 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
X
மழைநீரில் மூழ்கிய நெற்பயிரை காட்டும் விவசாயிகள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மேலாநல்லூர் , ராதாநல்லூர் , பொன்வாச நல்லூர் , சேத்தூர் கீழ மருதாநல்லூர், வில்லியநல்லூர், மாப்படுகை, பொன்னூர், பாண்டூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் சுமார் 10000 ஏக்கர் நீரில் மூழ்கி உள்ளன.

மேலும் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் வயல்வெளிகளில் சூழ்ந்துள்ள மழைநீர் வெளியேற முடியாத சூழல் நிலவுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதே மழை நீடித்தால் பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி அழுக கூடிய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் உடனடியாக வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கி வயல்வெளிகளில் சூழ்ந்துள்ள மழை நீர் வெளியேறுவதற்கு வழிவகை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை என்றும் இடுபொருட்கள் தருவதை தவிர்த்து காசோலையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 29 Nov 2021 2:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது