/* */

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி பெய்வதால் காலை வேலைக்கு செல்வோர் அவதியடைந்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, மங்கநல்லூர், குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 7.30 மணியை தாண்டியும் கடுமையான மூடுபனி இருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றன. சாரல் மழை போல் கடுமையான பனியால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு இருந்ததால் காலை வேலைக்கு செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர். வழக்கமாக மார்கழி மாதத்தில் செய்யும் பனி தற்போது மாசி மாதம் பாதி தேதியை கடந்தும் பெய்து வருகிறது.

பருவ மழை பருவம் தப்பி பெய்த நிலையில் தற்போது பனியும் பருவம் மாறி பொழிகிறது. ஏற்கனவே பெரும் மழையால் சம்பா பயிர்கள் பாதித்துள்ளது. தற்போது இந்த பனியால் மீதமுள்ள அறுவடை பணியும், அறுவடை செய்து விற்பனைக்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Updated On: 25 Feb 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்