மழையில் நனையும் நெல் மூட்டைகள்- விவசாயிகள் கவலை

X
By - M.Vinoth,Reporter |22 Feb 2021 7:15 AM
மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் அறுவடை செய்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் நேற்று இரவு கனமழை பெய்தது. இன்று மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, மங்கைநல்லூர், செம்பனார்கோவில், தில்லையாடி, திருவிளையாட்டம், பொறையார், தரங்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மழையால் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu