/* */

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வயது முதிர்ச்சியால் ஆண் சிங்கம் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
X

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தனிமையில் உலவும் சிங்கம் (கோப்பு படம்)

தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர்.கொரோனா காலக்கட்டத்தில், சுமார் 8 மாதங்கள் பூங்கா அடைக்கப்பட்டிருந்தது. இதனால் பல மிருகங்களும் பலியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. அக்கால கட்டத்தில், அரிய வகையான வெள்ளை புலி உயிரிழந்தது. அந்த புலி நரம்பியல் நோயான அட்டாக்ஸியா தாக்குதல் காரணமாக உயிரிழந்ததாகவும், இந்த நோய்க்கு எந்தவொரு சிகிச்சையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

2021 மே 26 ம் தேதிமுதல் கொரோனா 2 ம் அலை காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்ட்து. ஆனாலும், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் நீலா என்ற 9 வயது பெண்சிங்கம் உயிரிழந்தது. இதனால் மற்ற சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஆண் சிங்கம் ஒன்றும் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில் மீண்டும் தற்போது, வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு, கள்ளக்குறிச்சி சிறு பூங்காவில் இருந்து மணி என்னும் ஆண் சிங்கம் மீட்கப்பட்டது. இதையடுத்து இந்த சிங்கம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு ஊழியர்களை கொண்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஆண் சிங்கம் மணி இன்று உயிரிழந்தது. இதையடுத்து, வண்டலூர் பூங்காவில் கடந்த 6 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாகவும், தற்போது 10 சிங்கங்கள் மட்டுமே இருப்பதாகவும் பூங்கா நிர்வாகம் தரப்பில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 Jun 2022 3:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  7. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  8. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  9. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு